குடியின் நிழலை தேடி!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
அன்பை
மறக்கடிக்கும், அங்கே மட்டும் போகாதே!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஆண்டவனின்
அருள் நீக்கும், அந்த இடம் மட்டும் போகாதே!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
இருளினில்
உன்னை தள்ளும், அந்த இடம் மட்டும் போகாதே!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஈர
உள்ளம் கொண்ட உன்னை, ஈன செயலில் தள்ளும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
உன்னதமான
உன்னை, பிறர் உதாசீனம் செய்யும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஊரெல்லாம்
உன்னை பார்த்து, சிரிக்க செய்யும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
எளிமையான
உன்னை, எமனாய் மாற செய்யும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஏற்றங்கள்
அற்ற, ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்வை தரும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஐயம்
கொண்டு, உந்தன் வாழ்வை ஒழிக்கும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஒழுக்கம்
மறக்க செய்து, இழுக்கை செய்யத் தூண்டும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஓங்கி
ஒழிக்கும் உந்தன் புகழ், மடியச் செய்யும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஒளசதம்
என்றே சொல்லி ஆரம்பிக்கும் உன்னை, அடிமையாக்கும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
எஃகு
கோட்டையான உன் ஒழுக்கத்தை உடைத்து எறியும்!
அங்கே மட்டும்
போகாதே! அங்கே மட்டும் போகாதே!
No comments:
Post a Comment