மரத்தை வெட்டுவோம்!
நான் செய்த தவறு என்ன? விதையாய் இருந்த என்னை நிலத்தில் இட்டு தண்ணீர் பாய்ச்சிய விவசாயிக்கு என்னால் ஆன கைமாறாய் வளர்ந்த பின் பழங்களும், என் கிளைகளில் அவர் பிள்ளைகள் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ - அதை கண்டு நானும் மகிழ்தேன்! சுட்டு எரிக்கும் சூரியனின் தீ கதிர்களை என் இலைகளில் தாங்கி அவர்களை வெப்பத்தில் இருந்து காத்தேன்! அவர் பிள்ளைகள் சிறு கோவில்கட்டி விளையாட என் மரத்தடி தேர்வு செய்கையில் அந்த இறைவனின் உறைவிடமாக கொள்ள எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்! இரவும் பகலும் உறங்காது காற்றில் உள்ள மாசினை அகற்றி அவர்கள் நல் காற்றினை சுவாசிக்க ப்ரயத்தனை செய்தேன்! மனிதர்மட்டும் அல்ல பல பறவைகளின் உறைவிடமாக இருந்து, பறவைகளின் பாசம் பிள்ளைகள் கற்க! நானும் அதை இவர்கள் மறவாதிருப்பர் என்றே எண்ணியிருந்தேன்!
தன் சிரசில் ஒரு மயிர் நீர்ப்பின், தன் சிறப்பு குன்றி நிந்தனை செய்வர் என்று என்னும் இவர்கள்! நான் ஆண்டுதோறும் என் சிரசில் ஒரு இலை கூட இல்லாது இவர்களுக்காய் உதிர்த்து மீண்டும் துளிர்ப்பதை இவர்கள் நினைத்து பார்க்கவில்லை! இந்த மரம் குப்பைகளின் களஞ்சியம் என்றே என்னை தூற்றினார்! நான் இவர்களுக்காய் உழைத்த உழைப்பை இவர்கள் எல்லாம் உணரவில்லை! அது என் குற்றமும் இல்லை! சிறு பிள்ளையாய் இருக்கும் போது என்னோடு தோழமை கொண்ட இவர்கள் இன்று பாரமாய் நினைப்பது எனக்கு வேதனை அழிக்கவில்லை! ஏன்னென்றால் இவர்கள் எல்லாம் பெற்ற தாயையும், தந்தையையும் பாரமென கருதி! தன் குருதியில் இவர்களை உலகிற்கு கொண்டு வந்தவர்களை உதாசீனம் செய்பவர்கள் தானே! ஈருடல் ஓர் உயிர் என அஃக்னி சாட்சியை தனது மனைவி ஆகியவளையும், தன் உயிரில் உதித்த பிள்ளைகளையும் ஒரு பொருட்டாய் மதிக்காத இவர்களிடம் மனிதம் மறித்து பல காலம் ஆகியது என்பதை என்னை வெட்டும் போது மீண்டும் ஒருமுறை சிந்திப்பதை தவிர என்னால் வேறு என்ன செய்ய இயலும்! மனிதா மரத்தை வெட்டு ! மரம் வெட்டும் உன் மடத்தை (மடத்தனத்தை வெட்டு)! மனிதா! மனிதம் நீர்த்த உன் மடத்தை வெட்டு! மனம் இருக்கும் மனிதர்களை மரமாய் நினைக்கும் உன் மடத்தை மடைமையை வெட்டு! உன்னை சுற்றி உனக்காய் வாழ்ந்த பல உயிர்கள் உண்டு என்பதை உணராத உன் அறியாமையை வெட்டு! மனிதனாய் நீ வாழாமல் மடமாய்! உயிருள்ள ஒரு ஜடமாய் - இல்லாத ஒன்றை! நிலை இல்லாத ஒன்றை தேடும் உன்னுள் மரமாய் வேரூன்றி இருக்கும் அறியாமையை வெட்டு! வெட்டு! வெட்டு!
V Chandrasekaran
Mob: 9620922422
Mob: 9620922422
No comments:
Post a Comment